4 பிஸ்கட்ல 1 கிளாஸ் பால் மட்டுமா இருக்கும்?
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை; தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. ஆயிரம் உறவில் பெருமைகளில்லை; அன்னை தந்தையே அன்பின் எல்லை.
எப்போதும் மிகவும் விரும்பி கேட்டு ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. மாதா, பிதா, குரு, தெய்வம். இப்படி நம்ம படிச்சிருக்கோம்..அந்த உண்மையை புரிஞ்சு வாழ்ந்துட்டும் இருக்கோம். ஒவ்வொருத்தர் வாழ்க்கைலயும் அம்மா அப்பா பத்தி பேசணும்னா நிறைய பேசலாம். ஆயிரம் புஸ்தகம் எழுதினாலும் தீராது.
ஒரு வேளை நான் இன்னைக்கு அநேகமான மக்களுக்கு என்னுடைய பயிற்சி பட்டறையின் வழியாக நேர்மறை எண்ணங்கள் பற்றி பேசுறேன் என்றால் அதற்கு முதல் காரணம் என்னோட அம்மா தான். விளையாட்டு பருவத்துல அதெல்லாம் புரியாமலே நிறைய கேள்விகள் எல்லாம் எதிர்த்து கேட்டிருக்கேன். ஏன், எதுக்கு, எப்படி, யார் சொன்னாங்க இப்படி பல கேள்விகள். ஆனால், அவங்களோட வாழ்க்கைல இதெல்லாம் யாரவது உக்காந்து சொல்லி குடுத்திருப்பாங்களானு கேட்டா சத்தியமா எனக்கு பதில் தெரியாது.